வாழ்க்கை
"வாழ்க்கையை வாழ பிறந்துவிட்டேன்
அதை வாழ்ந்து முடித்துவிட்டுத்தான் இறப்பேன்"
- திருப்பதி
Monday, April 7, 2014
Saturday, November 24, 2012
Monday, October 1, 2012
நித்திரை கலயுதடி
நித்திரை கலயுதடி
மார்கழி மாத இரவில்
சித்திரமாக உன்முகம்
என் கனவில் வர
நித்தம் நித்தம் வீ பூக்கும்
நிரந்திரமாக என்னுயிர் வாங்கும்
சூத்திரம் ஏதும் உண்டோ
என்னை சுண்டி இழுக்கும் பெண்ணே
தத்தை மொழிபேசி என் ஜீவன்
சினுங்கவைத்து கருந்கூத்தல்
வாடையில் மயக்கி என்னை
விவாகம் முடித்து ஒருமாத
காலம் ஆனா பின்னும்
தனிமையில் உறங்கும் போது
நித்திரை கலயுதடி
Thursday, July 26, 2012
எழுத்து
முன்னொரு நாளில்
எதை எதையோ நினைத்து
கவிதை எழுதிள்ளேன்
உறக்கத்தை விடுத்து எழுதிள்ளேன்
அதன் பொருள் அகப்பட்டதில்லை
அகப்பட்ட தருணம் கவிதை எழுதவில்லை
அழகான இயற்கை தேசத்தில்
பாலைவனம் படர்ந்தது போல்
என்னக்கும் கவிதைக்கும் ஒற்றுமை இல்லாமல் இருந்தது
சொல்வதற்கும் அழகான சொல்
எழுதுவதற்கும் அழகான வார்த்தை
அது இல்லையென்றால் என்னக்கும் கவிதைக்கும்
கவிதைக்கும் கவிஞர்க்கும் ஒற்றுமையில்லை
ஒற்றுமைபடுத்தும்
எழுத்து.
Wednesday, July 25, 2012
ஓர் உணர்வு
தாயின் மடியில் தவழ்ந்தோம்
தகப்பன் சொல்லில் வளர்ந்தோம்
அண்ணன் தங்கை பாசத்தில் மூழ்கினோம்
சந்தர்ப்பம் நம்மை ஒன்றினைத்தது
வரையறுக்கப்படாத உறவுகளால் தோழ்சாய்ந்தோம்
மற்றார் கேட்டால் தோழன் தோழி என்றோம்
கதைகள் பேசினோம்
தோழ்சாய்ந்தோம்
கண்ணீர் துடைத்தோம் நமக்குள் இருக்கும் உறவு
என்னவென்று யோசித்தேன் ஆராய்ந்தேன் பின்
உணர்ந்தேன் உன்னிடம் காதல் என்றேன்
ஏலனமாய் பார்த்தாய் நான் சொல்லியதில் என்ன பிழை
காதல் கண்களால் காண வேண்டிய பொருளன்று
மனதளவில் உணர வேண்டிய ஓர் உணர்வு.
Sunday, May 6, 2012
அவள் கவிதை...!
காரணம்…
என்ன சொல்ல?
எதைச்சொல்ல?
நடந்ததை நடந்தபடியேச் சொல்லவா?
இல்லை மாற்றிச்சொல்லவா?
சொல்வதென்று முடிவாகிவிட்டது
உண்மையைச் சொல்லுகிறேன்.
அவள் இறந்து போய்விட்டாள்!
அவள் இறந்து விட்டாள் என்பதை
என் மனது ஏற்றுக்கொள்ள மறுக்கும் போது
என் உணர்வுகள் மட்டும் ஏற்றுக்கொண்டு என்ன பயன்?
அவள் அழகாய் கவிதை எழுதுவாள்
எழுதிய கவிதையை பார்த்து புன்னகைப் பூப்பாள்
நானும் அவள் புன்னகையில் மயங்கிபோனேன்.
பின் காதலும் கொண்டேன்.
அவள் இறந்த பின் என்னால் வாழ முடியவில்லை
சாக துணிந்தேன்.......
சற்று யோசித்தேன்.....
நான் இறந்து போனால் என் கவலை தீரும்
என்னை சுற்றியவர்கள் கவலை என்ன ஆகும்?
அவள் இறந்து போய்விட்டாள் என்பது விதியாகிவிட்டது
நான் வாழ வேண்டும் என்பதும் முடிவாகிவிட்டது.
நான் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறேன்......!
(இக்கவிதையில் "நான்" என்பது யாரை குறிக்கிறது??
பதில்கள் எதிர்பார்க்கப் படுகிறது)
என்ன சொல்ல?
எதைச்சொல்ல?
நடந்ததை நடந்தபடியேச் சொல்லவா?
இல்லை மாற்றிச்சொல்லவா?
சொல்வதென்று முடிவாகிவிட்டது
உண்மையைச் சொல்லுகிறேன்.
அவள் இறந்து போய்விட்டாள்!
அவள் இறந்து விட்டாள் என்பதை
என் மனது ஏற்றுக்கொள்ள மறுக்கும் போது
என் உணர்வுகள் மட்டும் ஏற்றுக்கொண்டு என்ன பயன்?
அவள் அழகாய் கவிதை எழுதுவாள்
எழுதிய கவிதையை பார்த்து புன்னகைப் பூப்பாள்
நானும் அவள் புன்னகையில் மயங்கிபோனேன்.
பின் காதலும் கொண்டேன்.
அவள் இறந்த பின் என்னால் வாழ முடியவில்லை
சாக துணிந்தேன்.......
சற்று யோசித்தேன்.....
நான் இறந்து போனால் என் கவலை தீரும்
என்னை சுற்றியவர்கள் கவலை என்ன ஆகும்?
அவள் இறந்து போய்விட்டாள் என்பது விதியாகிவிட்டது
நான் வாழ வேண்டும் என்பதும் முடிவாகிவிட்டது.
நான் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறேன்......!
(இக்கவிதையில் "நான்" என்பது யாரை குறிக்கிறது??
பதில்கள் எதிர்பார்க்கப் படுகிறது)
Subscribe to:
Posts (Atom)





