வாழ்க்கை

"வாழ்க்கையை வாழ பிறந்துவிட்டேன்

அதை வாழ்ந்து முடித்துவிட்டுத்தான் இறப்பேன்"

- திருப்பதி

Thursday, July 26, 2012

எழுத்து


முன்னொரு நாளில் 
எதை எதையோ நினைத்து   
கவிதை எழுதிள்ளேன் 
உறக்கத்தை விடுத்து எழுதிள்ளேன் 
அதன் பொருள் அகப்பட்டதில்லை 
அகப்பட்ட தருணம் கவிதை எழுதவில்லை 
அழகான இயற்கை தேசத்தில் 
பாலைவனம் படர்ந்தது போல் 
என்னக்கும் கவிதைக்கும் ஒற்றுமை இல்லாமல் இருந்தது 
சொல்வதற்கும் அழகான சொல் 
எழுதுவதற்கும் அழகான வார்த்தை 
அது  இல்லையென்றால் என்னக்கும் கவிதைக்கும் 
கவிதைக்கும் கவிஞர்க்கும் ஒற்றுமையில்லை 
ஒற்றுமைபடுத்தும் 
எழுத்து.   

Wednesday, July 25, 2012

ஓர் உணர்வு

தாயின் மடியில் தவழ்ந்தோம் 
தகப்பன் சொல்லில் வளர்ந்தோம் 
அண்ணன் தங்கை பாசத்தில் மூழ்கினோம் 
சந்தர்ப்பம் நம்மை ஒன்றினைத்தது
வரையறுக்கப்படாத உறவுகளால் தோழ்சாய்ந்தோம் 
மற்றார் கேட்டால் தோழன் தோழி என்றோம் 
கதைகள் பேசினோம்  தோழ்சாய்ந்தோம் 
கண்ணீர் துடைத்தோம் நமக்குள்  இருக்கும் உறவு 
என்னவென்று யோசித்தேன் ஆராய்ந்தேன் பின்
உணர்ந்தேன் உன்னிடம் காதல் என்றேன் 
ஏலனமாய் பார்த்தாய் நான் சொல்லியதில் என்ன பிழை 
காதல் கண்களால் காண வேண்டிய பொருளன்று 
மனதளவில் உணர  வேண்டிய ஓர்  உணர்வு.