வாழ்க்கை

"வாழ்க்கையை வாழ பிறந்துவிட்டேன்

அதை வாழ்ந்து முடித்துவிட்டுத்தான் இறப்பேன்"

- திருப்பதி

Wednesday, April 9, 2014

தோழன்


காமம் அறியாத

காதலன்
அவன்!
   

வானவில்

வானில்
ஏழு நிறங்களாய்
அர்ஜுனன் வளைத்த வில்!

Tuesday, April 8, 2014

சான்று

மண் மீதான
மழையின் காதல்
குடைக்காளான்! 

தனியுரிமை நிரந்திரமில்லை

தனியுரிமை தலைவனே
சொற்களில் புதுமை தந்தாய்
கனவுகளை நவீனம் செய்தாய்
நினைவுகள் அசல்பட 
மனிதர்களை சுதந்திரமாக
செயல்படச் செய்தாய்
தேகம் புழுவெய்தி எலும்புகள்
நிர்வாணம் அடையும்
அந்த மரணம் தான்
நிஜத்தைப் புலப்படுத்தும்!

Monday, April 7, 2014

தன்னம்பிக்கை

இறந்த பின் பிறப்பதும் 
கடந்த காலம் நிகழ்காலமாவதும் 
சாத்திய மற்றதே 
எதுவும் மெய்படாமல் போகலாம்
ஒருநாள் கனவுகள் மெய்படுவது
சாத்தியமே!