வாழ்க்கை

"வாழ்க்கையை வாழ பிறந்துவிட்டேன்

அதை வாழ்ந்து முடித்துவிட்டுத்தான் இறப்பேன்"

- திருப்பதி

Sunday, May 6, 2012

அவள் கவிதை...!

காரணம்…
என்ன சொல்ல?
எதைச்சொல்ல?
நடந்ததை நடந்தபடியேச் சொல்லவா?
இல்லை மாற்றிச்சொல்லவா?
சொல்வதென்று முடிவாகிவிட்டது
உண்மையைச் சொல்லுகிறேன்.

அவள் இறந்து போய்விட்டாள்!
அவள் இறந்து விட்டாள் என்பதை
என் மனது ஏற்றுக்கொள்ள மறுக்கும் போது
என் உணர்வுகள் மட்டும் ஏற்றுக்கொண்டு என்ன பயன்?

அவள் அழகாய் கவிதை எழுதுவாள்
எழுதிய கவிதையை பார்த்து புன்னகைப் பூப்பாள்
நானும் அவள் புன்னகையில் மயங்கிபோனேன்.
பின் காதலும் கொண்டேன்.

அவள் இறந்த பின் என்னால் வாழ முடியவில்லை
சாக துணிந்தேன்.......
சற்று யோசித்தேன்.....
நான் இறந்து போனால் என் கவலை தீரும்
என்னை சுற்றியவர்கள் கவலை என்ன ஆகும்?

அவள் இறந்து போய்விட்டாள் என்பது விதியாகிவிட்டது
நான் வாழ வேண்டும் என்பதும் முடிவாகிவிட்டது.
நான் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறேன்......!

(இக்கவிதையில் "நான்" என்பது யாரை குறிக்கிறது??
பதில்கள் எதிர்பார்க்கப் படுகிறது)

No comments:

Post a Comment