வாழ்க்கை

"வாழ்க்கையை வாழ பிறந்துவிட்டேன்

அதை வாழ்ந்து முடித்துவிட்டுத்தான் இறப்பேன்"

- திருப்பதி

Tuesday, March 27, 2012

அவள் பெயர் ராஜலெட்சுமி

என்னை எழுதத்துண்டிய முதல்  எழுத்து.
என்னை கவிஞன்னாக்கிய முதல் கவிதை.
என்னை வருடிச்சென்ற முதல் காற்று.
என்னை கண்ணிமைக்காமல் பார்க்கவைத்த அழகு. 
என்னை ரவிவர்மனாக்கிய முதல் ஓவியம். 
எனக்குள் இருக்கும் என்னுருவம் காட்டிய கண்ணாடி. 
நட்பாற்ற வேண்டுமென்று துடித்த முதல் தோழி.
என் புனைப்பெயரின் முதல் எழுத்து அவள் பெயர். 
என்னை மருகவைத்த அவள் புன்னகை.
ரசிக்கத்துண்டிய அவள் பேச்சு.
உணர்ச்சி பட வைக்கும் அவள் தைரியம். 
பக்குவப்பட வைக்கும் அவள் உணர்வுகள்.
என்னை ஒவ்வொரு நாளும் ஏங்க வைத்து,
வாழ வேண்டுமென்று வழிகாட்டிய முதல் காதல்.
முதல் முத்தத்தில் காதல் என்னவென்பதை உணர்த்தியவள். 
தொழ் சாய்ந்து அமர்ந்த போது அரவணைப்பின் உச்சம் காட்டியவள்.
கை கோர்த்து சென்றபோது மனைவி என்று உணர்வை காட்டியவள். 
அருகில் இல்லா நாளில் அவள் முகம் இரசிக்க,
அவளிடம் புகைப்படம் கேட்டேன்.
நிஜமாய் நானிருக்க புகைப்படம் எதற்கு என,
காதலின் உன்னத நிகழ்வை கண்முன் காட்டினாள்.
இன்று அவள் என்னுடன் இல்லையென்றாலும் 
என்றும் வாழ வேண்டுமென வாழவைக்கும் அவள் நினைவுகள்.
என் இதயத்தில் அழியா இடம் பெற்ற அவளின் பெயர்........
ராஜலெட்சுமி.