ரணத்தை மட்டும் அனுபவித்த என் இதையம் துடிக்கிறது எதையோ சொல்ல காதுள்ள மனிதர்களே என் வார்த்தைகளுக்காக அல்ல என் உண்ணர்ச்சிகளுகவது சற்று செவிசாயுங்கள்.
ஏனோ தெரியவில்லை என் வார்த்தைகள் தடுமரிகின்றன. செவி சாய்த்தவர்களே கண்களை என் பக்கம் திருப்புங்கள் நான் சொல்ல நினைத்தவை வார்த்தைகளாக மாறி என் பேனாவிற்கு பழியாயின வார்த்தைகளை கிழித்தெறிந்தேன். வரிகளை மாற்றி வைத்தேன்
சாதாரண வாக்கியத்தை உணர்ச்சிவசமாக்கினேன் "வாழ்கையை வாழ பிறந்துவிட்டேன் வாழ்ந்து முடித்துவிட்டுதான் இறப்பேன்" என்று.
இதைத்தான் நான் சொல்ல நினைத்தது இதை இரு வரிகளாக பார்பவர்களுக்கு கிறுக்கல்களாகவே தெரியும், இருவரியில் வாழ்க்கை என்று பார்பவர்களுக்கு சிற்பமாக தெரியும்.
இந்த வரியை உணரமுடியாதவர்களுக்கு ஓர் அறிவுரை, "உன்னை நீ உணரு" பின் என் வரிகள் தானாக உணருவாய்.
ஆறறிவு படைத்த மனிதா வாழ்க்கயை உன் கையில் வைத்துக்கொண்டே வாழ்க்கயை வாழ முடியவில்லை என்று பறக்க நினைக்கிறாயே! உன் அறியாமையை தற்போதாவது உணரு.
இன்னும் என்ன யோசனை உன்னை ஒரு நிலைக்கு கொண்டுசெல்ல துணை வேண்டுமா! கவலை வேண்டாம் "நான் இருக்கிறேன்" உனக்காக! தோழன் என்று!
உன்னக்கேன்ற பாதையை நீ தேர்ந்தெடுத்து அதில் பயணிக்க ஆரம்பித்து விடு. தடைகள் வந்தால் தண்டிச்செல் கவலைகள் வந்தால் ஒடைத்துச்செல்.
வெற்றியை கண்டு மகிழ்ச்சி கொள்ளாதே! அடுத்த நொடி உன் வெற்றி தோல்வி என்ற பதிலாக மாறலாம்!
சற்றும் துவண்டுவிடாதே மனதில் ஆணி அடித்தார்போல பதித்துவிடு இவ்வாகியத்தை
"வாழ்கையை வாழ பிறந்துவிட்டேன் வாழ்ந்து முடித்துவிட்டுதான் இறப்பேன்".
No comments:
Post a Comment