வாழ்க்கை

"வாழ்க்கையை வாழ பிறந்துவிட்டேன்

அதை வாழ்ந்து முடித்துவிட்டுத்தான் இறப்பேன்"

- திருப்பதி

Wednesday, April 9, 2014

தோழன்


காமம் அறியாத

காதலன்
அவன்!
   

வானவில்

வானில்
ஏழு நிறங்களாய்
அர்ஜுனன் வளைத்த வில்!

Tuesday, April 8, 2014

சான்று

மண் மீதான
மழையின் காதல்
குடைக்காளான்! 

தனியுரிமை நிரந்திரமில்லை

தனியுரிமை தலைவனே
சொற்களில் புதுமை தந்தாய்
கனவுகளை நவீனம் செய்தாய்
நினைவுகள் அசல்பட 
மனிதர்களை சுதந்திரமாக
செயல்படச் செய்தாய்
தேகம் புழுவெய்தி எலும்புகள்
நிர்வாணம் அடையும்
அந்த மரணம் தான்
நிஜத்தைப் புலப்படுத்தும்!

Monday, April 7, 2014

தன்னம்பிக்கை

இறந்த பின் பிறப்பதும் 
கடந்த காலம் நிகழ்காலமாவதும் 
சாத்திய மற்றதே 
எதுவும் மெய்படாமல் போகலாம்
ஒருநாள் கனவுகள் மெய்படுவது
சாத்தியமே!

Saturday, November 24, 2012

மறுசுழற்சி

உலகம்  வெப்பமயமாதலில் கருகி வருகிறது
புல் பூண்டு வளர்க்க இடம் இல்லாமல்
கூரைகளில் மணல் பரப்பி சுந்தரவனமாகும்
கட்டிடங்கள் மரக்கூழ் செய்ய
மரங்கள் இல்லாமல் காகிதங்களே
காகிதமாகிய கதையில் கசங்கி போன
என் காதல் கடிதம் போல் மறுசுழற்சிபடுமோ காதல்.    

Monday, October 1, 2012

நித்திரை கலயுதடி


நித்திரை கலயுதடி

மார்கழி மாத இரவில்
சித்திரமாக உன்முகம்
என் கனவில் வர
நித்தம் நித்தம் வீ பூக்கும்  
நிரந்திரமாக என்னுயிர் வாங்கும்
சூத்திரம் ஏதும் உண்டோ
என்னை சுண்டி இழுக்கும் பெண்ணே
தத்தை மொழிபேசி என் ஜீவன்
சினுங்கவைத்து கருந்கூத்தல்
வாடையில் மயக்கி என்னை
விவாகம் முடித்து ஒருமாத
காலம் ஆனா பின்னும்
தனிமையில் உறங்கும் போது
நித்திரை கலயுதடி

Thursday, July 26, 2012

எழுத்து


முன்னொரு நாளில் 
எதை எதையோ நினைத்து   
கவிதை எழுதிள்ளேன் 
உறக்கத்தை விடுத்து எழுதிள்ளேன் 
அதன் பொருள் அகப்பட்டதில்லை 
அகப்பட்ட தருணம் கவிதை எழுதவில்லை 
அழகான இயற்கை தேசத்தில் 
பாலைவனம் படர்ந்தது போல் 
என்னக்கும் கவிதைக்கும் ஒற்றுமை இல்லாமல் இருந்தது 
சொல்வதற்கும் அழகான சொல் 
எழுதுவதற்கும் அழகான வார்த்தை 
அது  இல்லையென்றால் என்னக்கும் கவிதைக்கும் 
கவிதைக்கும் கவிஞர்க்கும் ஒற்றுமையில்லை 
ஒற்றுமைபடுத்தும் 
எழுத்து.   

Wednesday, July 25, 2012

ஓர் உணர்வு

தாயின் மடியில் தவழ்ந்தோம் 
தகப்பன் சொல்லில் வளர்ந்தோம் 
அண்ணன் தங்கை பாசத்தில் மூழ்கினோம் 
சந்தர்ப்பம் நம்மை ஒன்றினைத்தது
வரையறுக்கப்படாத உறவுகளால் தோழ்சாய்ந்தோம் 
மற்றார் கேட்டால் தோழன் தோழி என்றோம் 
கதைகள் பேசினோம்  தோழ்சாய்ந்தோம் 
கண்ணீர் துடைத்தோம் நமக்குள்  இருக்கும் உறவு 
என்னவென்று யோசித்தேன் ஆராய்ந்தேன் பின்
உணர்ந்தேன் உன்னிடம் காதல் என்றேன் 
ஏலனமாய் பார்த்தாய் நான் சொல்லியதில் என்ன பிழை 
காதல் கண்களால் காண வேண்டிய பொருளன்று 
மனதளவில் உணர  வேண்டிய ஓர்  உணர்வு.    
 
  

Sunday, May 6, 2012

அவள் கவிதை...!

காரணம்…
என்ன சொல்ல?
எதைச்சொல்ல?
நடந்ததை நடந்தபடியேச் சொல்லவா?
இல்லை மாற்றிச்சொல்லவா?
சொல்வதென்று முடிவாகிவிட்டது
உண்மையைச் சொல்லுகிறேன்.

அவள் இறந்து போய்விட்டாள்!
அவள் இறந்து விட்டாள் என்பதை
என் மனது ஏற்றுக்கொள்ள மறுக்கும் போது
என் உணர்வுகள் மட்டும் ஏற்றுக்கொண்டு என்ன பயன்?

அவள் அழகாய் கவிதை எழுதுவாள்
எழுதிய கவிதையை பார்த்து புன்னகைப் பூப்பாள்
நானும் அவள் புன்னகையில் மயங்கிபோனேன்.
பின் காதலும் கொண்டேன்.

அவள் இறந்த பின் என்னால் வாழ முடியவில்லை
சாக துணிந்தேன்.......
சற்று யோசித்தேன்.....
நான் இறந்து போனால் என் கவலை தீரும்
என்னை சுற்றியவர்கள் கவலை என்ன ஆகும்?

அவள் இறந்து போய்விட்டாள் என்பது விதியாகிவிட்டது
நான் வாழ வேண்டும் என்பதும் முடிவாகிவிட்டது.
நான் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறேன்......!

(இக்கவிதையில் "நான்" என்பது யாரை குறிக்கிறது??
பதில்கள் எதிர்பார்க்கப் படுகிறது)

Sunday, April 29, 2012

நாங்கள் அகலிகையே!!!


வித விதமாக வர்ணங்கள் உண்டு 
அந்த வர்ணங்களுக்கும் ஓர் குணம் உண்டு 
நம் மூவண்ணக்கொடியின் மேல் வண்ணம் 
எங்களின் நிறமே!
புதிது புதிதாக தொழில் நுட்பங்கள் முளைக்க்கின்றன 
புதிது புதிதாக மாற்றங்களும் நிகழ்கின்றன 
ஆனால் எங்களுக்கென்று புதியதாக எந்த நிகழ்வும் 
முளைப்பதில்லை, நிகழ்வதும் இல்லை.
தொப்புள் கொடி உறவாகத் தொடரும்
எங்களின் "வறுமை" மட்டுமே 
புது புது காரணங்களினால் புதிது புதிதாக முளைகின்றன.

அறிவியலாம்,
முழு அக எதிரொளிப்பு விதியால் 
கானல் நீர் தோன்றுகிறது
என்ன விதியென்று எங்களுக்கும் தெரியவில்லை 
எங்களின் வறுமைக்கு!

கல்லுடைக்கும் போதும் 
பொதி சுமக்கும் போதும் 
எங்களின் கனவுகள் வியர்வையாக சிந்தும்
எங்களின் எதிர்காலம் என்ன தெரியுமா?
எங்களின் கனவு என்ன தெரியுமா?
அழகான "கேள்விக்குறி"
நாங்கள் விரும்புவது என்ன தெரியுமா?
எங்களுக்கென்ற "புதுமை" விடியலையே.
புதுமை அழகான சொல்
ஆற்றலை மிஞ்சும் சக்தி
பழமைகளை அழித்திடாமல் பல மாற்றம் செய்யும் புதுமை
எங்களை போன்றவர்களுக்கு காணக்கிடைக்கா உலகதிசையமே!
அதை எங்கள் கண்முன்னே கொண்டு வரப்போகும் மானிடன் யாரோ?
அது வரையில் நாங்கள் அகலிகையே!!!

Tuesday, March 27, 2012

அவள் பெயர் ராஜலெட்சுமி

என்னை எழுதத்துண்டிய முதல்  எழுத்து.
என்னை கவிஞன்னாக்கிய முதல் கவிதை.
என்னை வருடிச்சென்ற முதல் காற்று.
என்னை கண்ணிமைக்காமல் பார்க்கவைத்த அழகு. 
என்னை ரவிவர்மனாக்கிய முதல் ஓவியம். 
எனக்குள் இருக்கும் என்னுருவம் காட்டிய கண்ணாடி. 
நட்பாற்ற வேண்டுமென்று துடித்த முதல் தோழி.
என் புனைப்பெயரின் முதல் எழுத்து அவள் பெயர். 
என்னை மருகவைத்த அவள் புன்னகை.
ரசிக்கத்துண்டிய அவள் பேச்சு.
உணர்ச்சி பட வைக்கும் அவள் தைரியம். 
பக்குவப்பட வைக்கும் அவள் உணர்வுகள்.
என்னை ஒவ்வொரு நாளும் ஏங்க வைத்து,
வாழ வேண்டுமென்று வழிகாட்டிய முதல் காதல்.
முதல் முத்தத்தில் காதல் என்னவென்பதை உணர்த்தியவள். 
தொழ் சாய்ந்து அமர்ந்த போது அரவணைப்பின் உச்சம் காட்டியவள்.
கை கோர்த்து சென்றபோது மனைவி என்று உணர்வை காட்டியவள். 
அருகில் இல்லா நாளில் அவள் முகம் இரசிக்க,
அவளிடம் புகைப்படம் கேட்டேன்.
நிஜமாய் நானிருக்க புகைப்படம் எதற்கு என,
காதலின் உன்னத நிகழ்வை கண்முன் காட்டினாள்.
இன்று அவள் என்னுடன் இல்லையென்றாலும் 
என்றும் வாழ வேண்டுமென வாழவைக்கும் அவள் நினைவுகள்.
என் இதயத்தில் அழியா இடம் பெற்ற அவளின் பெயர்........
ராஜலெட்சுமி.

Sunday, October 9, 2011

உருவாகும் உயிர் இந்தியா

திகாலை நேரம் 
தவனும் எழுந்தான் 
லைகளும் துளிர்விட
ரமும் தலை சாய்ந்தது.
ள்ளம் சிலிர்க்க   
மை முத்தமிடுகிறது  
ண்ணங்களும், 
க்கங்களும்.
யமின்றி உள்ளேன் 
ற்றை வீரன் நான் 
ராயிரம் கனவுகளுடன் 
ஒளடாத திரவியம்(ink) குறைத்திட வருகிறேன்!
 அது "வலிய இந்தியா உருவாக" கையெழுத்திட

Sunday, September 4, 2011

கல்வி!!


வறுமை என்னுடன் பிறக்கவில்லை 
எனக்காகவும் பிறக்கவில்லை. ஆனால் 
கல்வி என்னும் எறிச்சுடரை ஏந்தும்வரையில்
வறுமை என்னை விட்டு ஒழியப்போவதும் இல்லை.

Saturday, July 2, 2011

காதலின் ஆரம்பமே

விடை கொடு என் உயிரே
நான் போய் வருகிறேன் !
வரும் ஜென்மத்திலாவது
ஒன்றாக வாழலாம்
கணவன் மனைவியாகவே!

கண்ணிர் சிந்தாதே
என் ஆருயிரே
என் நினைவும் காதலும்
உன்னிடம்தான் உள்ளது.

நான் இல்லாத இந்த வாழ்க்கயை
நம் காதலுடன் வாழ்
நீ வாழ்ந்த வாழ்க்கயை
கேட்க மீண்டும் பிறந்து வரும்
என்னிடம் சொல்வாயா
ஆவலுடன் காத்திருக்கிறேன்.

கண்ணே என் கண்மணியே
கண்ணீர் சிந்தாதே
நான் உன்னை விட்டு செல்லவில்லையடி
உனக்குள் உன் உயிராய்
கலந்துவிட்டேனடி
சற்று புண்ணகை செய் என் காதலியே
ஆசையுடன் விடைபெறுவேன் .

உன் கைகளை பிடிக்க ஆசைப்பட்டேன்
அதற்குமுன் என் கைகளை
பிடித்துவிட்டான் எமன்!
யார்மீது குத்தம் சொல்ல!
உன் மீதா! என் மீதா! இல்லை எமன் மீதா!

உன் உயராய் கலந்து விட்ட
என்னை மறந்துவிடாதே!
உன்னுடன் ஒரு நாள், ஒரு நிமிடம்
வாழ கொடுத்துவைக்கவில்லை நான்.

கவலைகள் வேண்டாம்
வேதனைகளும் துயரங்களும்
காதலில் தோற்றவர்களுக்குத்தான்
நமக்கல்ல .
உண்ணர்வையும் உயிரையும்
புரிந்துகொண்ட நம்மிருவருக்கு
இந்த காதல் பிரிவில்லை
காதலின் ஆரம்பமே!

பத்தாம் நாள்!

முதல் முறை
வெட்கத்தில் தலைகுனிந்தேன்
அவனை கண்ட
முதல் நாள்!

கண்கள்,

நீரின்றி தவிக்கும்
மீன்கள் போல துடித்தது
அவன் கண்கள் காணாத
இரண்டாம் நாள்!

வெகு தூரம் ஓடிய

கால்கள் போல் துவண்டது இதையம்
காதல் வலியால்
மூன்றாம் நாள்!

உதடுகள் ,

ரோஜா இதழை போல் வாடியது
அவனுடன் பேச ஏங்கிய
நான்காம் நாள்!

மல்லிகை போல்

முகம் புன்னகையால் பூத்தது
அவன் பேசின "காதலால்"
ஐந்தாம் நாள்!

இரவு,

உறக்கம் பிடித்தது
அவனால் கண்ட கனவு
ஆறாம் நாள்!

தேகம் சிலிர்த்தது

அவனுடன் இருந்த
சில நிமிடம்
ஏழாம் நாள்!

உலகம் புதிதானது

அவன் உதடு தீண்டிய
என் உதடுகளால்
எட்டாம் நாள்!

வாழ்கையை வாழ்ந்த அர்த்தம்
புரியவில்லை
அவனுடன் ஓடிச்சென்ற
ஒன்பதாம் நாள்!

என் பெண்மையை

உணர்ந்தேன்
அவன் சுண்டு விரல் தீண்டி
என் தேகம் விற்ற
பத்தாம் நாள்!
அப்போதுதான் தெரிந்தது
அவனுக்குள் இருந்தது
வெறும் காமம் என்று!

மனித நேயம்

விதி செய்த பாவம் 
எங்களை ஈழமாக பிறக்கவைத்தது
எங்கள் தேகத்தில்  
கூர்முனை வாள் கொண்டு பிளந்தால் 
பீறிற்று வருவது குருதி தானே
தண்ணீர் அல்லவே.

துயில் கொண்டவரை 
தட்டி எழுப்பினால் கலைந்துசெல்லும்  
கனவுகள் எங்களுக்கும் தான்.
நாங்கள் மனிதர்கள்
மிருகம் அல்ல.

தாகமெடுத்தால் பருகுவது 
தண்ணீரை தான் 
சாக்கடை அல்ல.
எங்களுக்கும் இருப்பது 
சிறு இதையம் தான் 
பாறை அல்ல.

நாங்கள் செய்த பாவம் 
ஈழமாக பிறந்தது தானே 
மனிதராக பிறந்தது அல்லவே.
எங்களையும் வாழவிடுங்கள் 
நாங்களும் உயர்திணை தான் 
றிணை அல்ல 
ஏனென்றால் எங்களுக்கும் உண்டு 
"மனித நேயம்"

Saturday, May 14, 2011

தனிமை



மௌனமாய் 
உணர்வுகளுடன் இதயம் 
பேசிக்கொள்ளும் அழகான நேரம்,
என் பிறப்பால் கிடைத்த 
பெருஞ்சொத்து
தனிமை!


குப்பைத் தொட்டிக்கு

பரிசாய் ஈன்றவளே! 
உன் மகள் என்னுடன் 
வாழ விரும்பவில்லையா.
பாசமாய் தாலாட்டி 
நேசமாய் பாலுட்டி
ஆசையில் முத்தமிடும்நாட்களை 
இழந்துவிட்டேன் என 
ஏங்கி தவிக்கிறேன் தாயே!

தொட்டிலிலே தாலாட்டி
புன்னகை பூத்த போது
சர்கரை ஊட்டி
பேருவைக்க மறந்தவளே 
உன் மகள்
குப்பைத் தொட்டியில்    
கதறி அழுதபோது 
எச்சிலையால் ஆசிர்வதிக்கப்பட்டு 
"அனாதை" பெயர் சுட்டப்பட்டேனே 
இதற்காகத்தான் பிறந்தேனோ!

என் போல் சிறுமி 
என்னை கண்டு பயத்தில் 
ஒருவளை கட்டிபிடித்தாளே
அர்த்தம் தேடி அலைகிறேன்
"அம்மா"
"அப்பா"  
"தங்கை"
"அண்ணன்"
என்ற வார்த்தைகளுக்கு.

பால்குடி மறக்கும் 
பருவத்திலே 
தாய் மடிப்பாலை 
குடிக்க ஏங்கினேன் 
தாய் பாசம் காண!

கதிரவன் மறைந்து 
சந்திரன் வருகையில் 
"தந்தயின்" கைபிடித்து 
வீதி சுற்ற விதி அமையவில்லையே 
தந்தைக்காக!

என் முகச்ஜாடைல்
பிறந்தவளை 
ஆசையாய் தூக்கி 
கொஞ்சிடகூடலையே வாழ்கை 
தங்கைக்காக!

என்ன தோழமை கண்டபோதும் 
உள்ளதை ஆசையாய் சொல்லி 
ஆனந்தம் காண 
அண்ணன் ஒருவன் 
கிடைக்கவில்லையே!

செல்லமாய் "ராசாத்தி"
"பொன்னுமணி ரத்தினமே"
வாழ்த்திட தாத்தா பாட்டி 
பிறக்கவில்லையே!

கனவில் விடலையை கண்டு
நானத்தில் "பருவம்"
வந்த பின்னர் 
மஞ்சள் வளைவிக்கும்
கலர் கலர் ரிப்பங்களுக்கும் 
ஏங்கிய நிமிடத்தில் 
ஆடையின்றி சிறு குழந்தையாய் நான் நிற்க
மானம் மறைக்க விடுகரை ஒதுங்க 
பலபேறு கண்ணுக்கு "வேசை"யாக 
நான் பட்டேனே.
தேவதையாக சித்தரிக்கப்பட வேண்டியவள்
நான்கு சுவர் அறைக்குள் 
மீசைகளுக்கு சிற்பமாய் போன 
கதையை என்னவென்று சொல்ல!

என் வாழ்கையை 
சீரழித்து விட்டு 
உல்லாசம் கண்ட 

முறடன்களுக்காக 

தாயே......

புனித பிறப்பம்மா "பெண்மை"
தனிமையில் குப்பையில் 
எரிந்துபலியாக்கிவிடாதே!
"நான்" ஒருவளே போதும்
இம்மண்ணில் வாழ்கையை 
தொலைத்தவள் என்று!    

Tuesday, May 10, 2011

அன்பு தோழி!


ன்னையின் அரவணைப்பு
கிடைத்த எனக்கு மற்ற பெண்களின்
பழக்கம் இல்லை சிறு வயதிலிருந்து!
என்னுடன் பிறந்தவர்கள்
அண்ணன்மார்கள் மட்டுமே
அக்காளின் பாசம் காண
ஏங்கி தவித்தேன்
பசுவின் மடிப்பாலை
குடிக்க ஏங்கும் கன்று  போல.
எப்பெண்ணைப் பார்த்தாலும்
மனதில் ஏக்கம் 
அக்காள் என்று.

அவ்வாறான எனக்கு
முதலில் கிடைத்த ஒரு
பெண்ணின் பாசம்
"தோழி" என்ற பெயரில்.
என் வாழ்வில் இரண்டவது
பெண் இவள்!
என் அன்னையை போன்று
என்னை அரவனைத்தாள்
அவள் பாசத்தில் மூழ்கிவிட்டேன்
டைடானிக் கப்பலைப்போலவே.


தேனாகத் தித்திக்கும்
என் மகிழ்ச்சியில் ஒரு
தோழியாக பங்கேற்றாள்.
கண்களில் கண்ணீர்
மணிகள் கண்டபோது
அன்னையாகவும் ஒருவேடுத்தாள்.
நான் சிரிக்க
என் கஷ்டங்களை சுமந்தவள்
என்னை சிரிக்க வைக்கின்றாள்.


இவளுக்கும் எனக்கும்
என்ன பந்தம்!
பூர்விகக்கால நன்றி கடனோ!
இல்லை,
எதிர்கால துணையோ
எதுவாகவும் இருக்கட்டும்
அவளுக்கென்று வாழ்வேன்.
"தோழன்" என்ற பெயரை
மட்டும் கொண்டு
அவள் அருகில் இருந்து
மனம்  வீசிக்கொண்டிருப்பேன்!
என் அன்பு தோழியே
உன்னை சுமப்பதிலும்
சுகமாகக்கொள்ளுவேன்!

Sunday, May 8, 2011

வீர வாக்கியம்



ரணத்தை மட்டும் அனுபவித்த 
என் இதையம் 
துடிக்கிறது எதையோ சொல்ல
காதுள்ள மனிதர்களே 
என் வார்த்தைகளுக்காக அல்ல 
என் உண்ணர்ச்சிகளுகவது 
சற்று செவிசாயுங்கள். 

ஏனோ தெரியவில்லை என் வார்த்தைகள் 
தடுமரிகின்றன. 
செவி சாய்த்தவர்களே கண்களை என் 
பக்கம் திருப்புங்கள் 
நான் சொல்ல நினைத்தவை 
வார்த்தைகளாக மாறி 
என் பேனாவிற்கு பழியாயின 
வார்த்தைகளை கிழித்தெறிந்தேன். 
வரிகளை மாற்றி வைத்தேன்

சாதாரண வாக்கியத்தை  
உணர்ச்சிவசமாக்கினேன் 
"வாழ்கையை வாழ பிறந்துவிட்டேன் 
வாழ்ந்து முடித்துவிட்டுதான் இறப்பேன்"
 என்று. 

இதைத்தான் நான் சொல்ல நினைத்தது 
இதை இரு வரிகளாக பார்பவர்களுக்கு 
கிறுக்கல்களாகவே தெரியும், 
இருவரியில் வாழ்க்கை என்று பார்பவர்களுக்கு 
சிற்பமாக தெரியும். 

இந்த வரியை உணரமுடியாதவர்களுக்கு 
ஓர் அறிவுரை, 
"உன்னை நீ உணரு" 
பின் என் வரிகள் 
தானாக உணருவாய். 

ஆறறிவு படைத்த மனிதா 
வாழ்க்கயை உன் கையில் 
வைத்துக்கொண்டே 
வாழ்க்கயை வாழ முடியவில்லை 
என்று பறக்க நினைக்கிறாயே! 
உன் அறியாமையை 
தற்போதாவது உணரு. 

இன்னும் என்ன யோசனை 
உன்னை ஒரு நிலைக்கு 
கொண்டுசெல்ல துணை வேண்டுமா! 
கவலை வேண்டாம் 
"நான் இருக்கிறேன்" 
உனக்காக! தோழன் என்று! 

உன்னக்கேன்ற பாதையை 
நீ தேர்ந்தெடுத்து 
அதில் பயணிக்க 
ஆரம்பித்து விடு. 
தடைகள் வந்தால் தண்டிச்செல் 
கவலைகள் வந்தால் ஒடைத்துச்செல். 

வெற்றியை கண்டு 
மகிழ்ச்சி கொள்ளாதே! 
அடுத்த நொடி உன் வெற்றி 
தோல்வி என்ற பதிலாக 
மாறலாம்! 


சற்றும் துவண்டுவிடாதே 
மனதில் ஆணி அடித்தார்போல 
பதித்துவிடு இவ்வாகியத்தை 

"வாழ்கையை வாழ பிறந்துவிட்டேன் 
வாழ்ந்து முடித்துவிட்டுதான் இறப்பேன்".