வாழ்க்கை

"வாழ்க்கையை வாழ பிறந்துவிட்டேன்

அதை வாழ்ந்து முடித்துவிட்டுத்தான் இறப்பேன்"

- திருப்பதி

Saturday, July 2, 2011

காதலின் ஆரம்பமே

விடை கொடு என் உயிரே
நான் போய் வருகிறேன் !
வரும் ஜென்மத்திலாவது
ஒன்றாக வாழலாம்
கணவன் மனைவியாகவே!

கண்ணிர் சிந்தாதே
என் ஆருயிரே
என் நினைவும் காதலும்
உன்னிடம்தான் உள்ளது.

நான் இல்லாத இந்த வாழ்க்கயை
நம் காதலுடன் வாழ்
நீ வாழ்ந்த வாழ்க்கயை
கேட்க மீண்டும் பிறந்து வரும்
என்னிடம் சொல்வாயா
ஆவலுடன் காத்திருக்கிறேன்.

கண்ணே என் கண்மணியே
கண்ணீர் சிந்தாதே
நான் உன்னை விட்டு செல்லவில்லையடி
உனக்குள் உன் உயிராய்
கலந்துவிட்டேனடி
சற்று புண்ணகை செய் என் காதலியே
ஆசையுடன் விடைபெறுவேன் .

உன் கைகளை பிடிக்க ஆசைப்பட்டேன்
அதற்குமுன் என் கைகளை
பிடித்துவிட்டான் எமன்!
யார்மீது குத்தம் சொல்ல!
உன் மீதா! என் மீதா! இல்லை எமன் மீதா!

உன் உயராய் கலந்து விட்ட
என்னை மறந்துவிடாதே!
உன்னுடன் ஒரு நாள், ஒரு நிமிடம்
வாழ கொடுத்துவைக்கவில்லை நான்.

கவலைகள் வேண்டாம்
வேதனைகளும் துயரங்களும்
காதலில் தோற்றவர்களுக்குத்தான்
நமக்கல்ல .
உண்ணர்வையும் உயிரையும்
புரிந்துகொண்ட நம்மிருவருக்கு
இந்த காதல் பிரிவில்லை
காதலின் ஆரம்பமே!

No comments:

Post a Comment