வாழ்க்கை

"வாழ்க்கையை வாழ பிறந்துவிட்டேன்

அதை வாழ்ந்து முடித்துவிட்டுத்தான் இறப்பேன்"

- திருப்பதி

Saturday, July 2, 2011

மனித நேயம்

விதி செய்த பாவம் 
எங்களை ஈழமாக பிறக்கவைத்தது
எங்கள் தேகத்தில்  
கூர்முனை வாள் கொண்டு பிளந்தால் 
பீறிற்று வருவது குருதி தானே
தண்ணீர் அல்லவே.

துயில் கொண்டவரை 
தட்டி எழுப்பினால் கலைந்துசெல்லும்  
கனவுகள் எங்களுக்கும் தான்.
நாங்கள் மனிதர்கள்
மிருகம் அல்ல.

தாகமெடுத்தால் பருகுவது 
தண்ணீரை தான் 
சாக்கடை அல்ல.
எங்களுக்கும் இருப்பது 
சிறு இதையம் தான் 
பாறை அல்ல.

நாங்கள் செய்த பாவம் 
ஈழமாக பிறந்தது தானே 
மனிதராக பிறந்தது அல்லவே.
எங்களையும் வாழவிடுங்கள் 
நாங்களும் உயர்திணை தான் 
றிணை அல்ல 
ஏனென்றால் எங்களுக்கும் உண்டு 
"மனித நேயம்"

No comments:

Post a Comment