விதி செய்த பாவம்
எங்களை ஈழமாக பிறக்கவைத்தது
எங்கள் தேகத்தில்
கூர்முனை வாள் கொண்டு பிளந்தால்
பீறிற்று வருவது குருதி தானே
தண்ணீர் அல்லவே.
துயில் கொண்டவரை
தட்டி எழுப்பினால் கலைந்துசெல்லும்
கனவுகள் எங்களுக்கும் தான்.
நாங்கள் மனிதர்கள்
மிருகம் அல்ல.
தாகமெடுத்தால் பருகுவது
தண்ணீரை தான்
சாக்கடை அல்ல.
எங்களுக்கும் இருப்பது
சிறு இதையம் தான்
பாறை அல்ல.
நாங்கள் செய்த பாவம்
ஈழமாக பிறந்தது தானே
மனிதராக பிறந்தது அல்லவே.
எங்களையும் வாழவிடுங்கள்
நாங்களும் உயர்திணை தான்
அஃறிணை அல்ல
ஏனென்றால் எங்களுக்கும் உண்டு
"மனித நேயம்"
No comments:
Post a Comment