வாழ்க்கை

"வாழ்க்கையை வாழ பிறந்துவிட்டேன்

அதை வாழ்ந்து முடித்துவிட்டுத்தான் இறப்பேன்"

- திருப்பதி

Saturday, May 14, 2011

தனிமை



மௌனமாய் 
உணர்வுகளுடன் இதயம் 
பேசிக்கொள்ளும் அழகான நேரம்,
என் பிறப்பால் கிடைத்த 
பெருஞ்சொத்து
தனிமை!


குப்பைத் தொட்டிக்கு

பரிசாய் ஈன்றவளே! 
உன் மகள் என்னுடன் 
வாழ விரும்பவில்லையா.
பாசமாய் தாலாட்டி 
நேசமாய் பாலுட்டி
ஆசையில் முத்தமிடும்நாட்களை 
இழந்துவிட்டேன் என 
ஏங்கி தவிக்கிறேன் தாயே!

தொட்டிலிலே தாலாட்டி
புன்னகை பூத்த போது
சர்கரை ஊட்டி
பேருவைக்க மறந்தவளே 
உன் மகள்
குப்பைத் தொட்டியில்    
கதறி அழுதபோது 
எச்சிலையால் ஆசிர்வதிக்கப்பட்டு 
"அனாதை" பெயர் சுட்டப்பட்டேனே 
இதற்காகத்தான் பிறந்தேனோ!

என் போல் சிறுமி 
என்னை கண்டு பயத்தில் 
ஒருவளை கட்டிபிடித்தாளே
அர்த்தம் தேடி அலைகிறேன்
"அம்மா"
"அப்பா"  
"தங்கை"
"அண்ணன்"
என்ற வார்த்தைகளுக்கு.

பால்குடி மறக்கும் 
பருவத்திலே 
தாய் மடிப்பாலை 
குடிக்க ஏங்கினேன் 
தாய் பாசம் காண!

கதிரவன் மறைந்து 
சந்திரன் வருகையில் 
"தந்தயின்" கைபிடித்து 
வீதி சுற்ற விதி அமையவில்லையே 
தந்தைக்காக!

என் முகச்ஜாடைல்
பிறந்தவளை 
ஆசையாய் தூக்கி 
கொஞ்சிடகூடலையே வாழ்கை 
தங்கைக்காக!

என்ன தோழமை கண்டபோதும் 
உள்ளதை ஆசையாய் சொல்லி 
ஆனந்தம் காண 
அண்ணன் ஒருவன் 
கிடைக்கவில்லையே!

செல்லமாய் "ராசாத்தி"
"பொன்னுமணி ரத்தினமே"
வாழ்த்திட தாத்தா பாட்டி 
பிறக்கவில்லையே!

கனவில் விடலையை கண்டு
நானத்தில் "பருவம்"
வந்த பின்னர் 
மஞ்சள் வளைவிக்கும்
கலர் கலர் ரிப்பங்களுக்கும் 
ஏங்கிய நிமிடத்தில் 
ஆடையின்றி சிறு குழந்தையாய் நான் நிற்க
மானம் மறைக்க விடுகரை ஒதுங்க 
பலபேறு கண்ணுக்கு "வேசை"யாக 
நான் பட்டேனே.
தேவதையாக சித்தரிக்கப்பட வேண்டியவள்
நான்கு சுவர் அறைக்குள் 
மீசைகளுக்கு சிற்பமாய் போன 
கதையை என்னவென்று சொல்ல!

என் வாழ்கையை 
சீரழித்து விட்டு 
உல்லாசம் கண்ட 

முறடன்களுக்காக 

தாயே......

புனித பிறப்பம்மா "பெண்மை"
தனிமையில் குப்பையில் 
எரிந்துபலியாக்கிவிடாதே!
"நான்" ஒருவளே போதும்
இம்மண்ணில் வாழ்கையை 
தொலைத்தவள் என்று!    

2 comments:

  1. உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பார்க்கவும்.

    http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_03.html

    ReplyDelete
  2. பாராற்றிய அண்ணன் "கூர்மதியன்" அவர்களுகு நன்றி.

    ReplyDelete